Posts

திருமணமான மூன்றே நாட்களில் புதுமண தம்பதிகளுக்கு நேர்ந்த சோகம்!!

Image
திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான மனோஜ் குமாருக்கும்(31), சென்னை பீர்க்கன்கரணையை சேர்ந்த மருத்துவரான கார்த்திகா(30) என்பவருக்கும் கடந்த 28-ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில், நேற்று இரவு சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு காரில் சென்ற போது, பேரம்பாக்கத்தை அடுத்த கூவம் பகுதியில் எதிரே வந்த சிமெண்ட் கலவை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி நிலை தடுமாறி கார் மீது மோதியதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இந்த விபத்தில் புதுமண தம்பதி இருவரும் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் லாரியை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் மப்பேடு காவல் துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து இருவரின் சடலங்களையும் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சுமார் 5 மணி நேரம் போராடி லாரிக்குள் சிக்கிக் கொண்டிருந்த காரை வெளியே எடுத்தனர். இந்த சம்பவத்தால் பூந்தமல்லி-அரக்கோணம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திரு...

ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்!!

Image
ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர் ஆவின் பாலை அரசு நிர்ணயித்த விலையைவிட அதிக விலைக்கு விற்றால் தன்னிடம் அல்லது ஆவின் புகார் எண்ணில் தொடர்புகொண்டு புகாரளிக்கலாம் என்றும், அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார். மேலும் ஆவின் பாலகங்களில் நாட்டு மாட்டுப்பால் விற்பனை செய்வது குறித்து மக்களிடம் கருத்துக் கேட்டு முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதேநேரம் நாட்டு மாட்டுப்பாலை தனியாக ஆவின் நிறுவனத்திற்கு கொண்டுவந்து பாக்கெட் தயாரித்து விற்க வேண்டும் என்பதால் நாட்டு மாட்டுபால் விலை அதிகமாகும் என்றும் தெரிவித்திருந்தார். தற்போது ஆட்டுப்பாலும் ஆவினில் விற்பனைக்கு கொண்டுவரப்படும் என தெரிவித்திருக்கிறார்.

இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

Image
இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்தநிகழ்வில் தென்காசிமாவட்டம் கடையநல்லூர் குமந்தாபுரத்தை சேர்ந்தகுருசேவ ரத்தினா  டாக்டர். பா.பாலீஸ்வரன் M.B.A. அவர்களுக்கு சிறந்த சமூகசேவைக்கான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் விருது /நாளையகலாம் விருது வழங்கப்பட்டது  இவ்விருதினை நீதியரசர்  மதிப்புமிகு. வைத்திலிங்கம் அவர்கள் டாக்டர் ஏபி.ஜே. அப்துல்கலாம் அவர்களின் பேரன்.மதிப்புமிகு.சேக்சலீம் அவர்களும்  சர்வதேச தமிழ்கலைக்கழகத்தின் வேந்தர் மதிப்புமிகு.பாண்டியராஜன் அவர்களும் பல்கலைகழகத்தின் முதல்வர் மதுரை காமராஜர் பல்கலைகழகதகல் தொலைதொடர்பு அதிகாரி அவர்களும் காவல்துறை உயர் அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வேளாண் சட்டம், பெட்ரோல், டீசல் விளை வாசி உயர்வு மற்றும் பொதுத்துறை நிருவனங்கள் விற்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஒன்றிய பாசிச பாஜக ஆட்சியை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது !!

Image
வேளாண் சட்டம், பெட்ரோல், டீசல் விளை வாசி உயர்வு மற்றும் பொதுத்துறை நிருவனங்கள் விற்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஒன்றிய பாசிச பாஜக ஆட்சியை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டம் இன்று 20.09.2021 இடம். ஒன்றிய கவுன்சிலர் குணாதயாநிதி BCom, HDSE அவர்களின் அலுவலகம், வெள்ளானூர், மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் ஆணைக்கினங்க மாவட்ட கழக செயலாளர் அண்ணன் மாதவரம் S. சுதர்சனம் MLA அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒன்றிய கழக செயலாளர் அண்ணன் அயப்பாக்கம் துரை வீரமணி அவர்களின் ஏற்பாட்டில் வெள்ளானூர் ஊராட்சியில் ஆங்காங்கே கருப்பு கொடி ஏந்தி கழக நிர்வாகிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடன் D.M.பாலமுருகன், காங்கிரஸ் கமிட்டியை சார்ந்த திரு.நந்தன், M. நாகையன், Ocf இராஜேந்திரன், G. கருனாகரன், பொன் மகேந்திரன்,N.சரவன், S.சஞ்சய்.

செப்டம்பர் 11 மகாகவி நாள் முதல்வர் அறிவிப்பு!!

Image
மகாகவி சுப்பிரமணிய பாரதியின் நினைவு நாளான இன்று மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு பாடுபட்டவரும் பெரும்புலவருமான மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள் கடந்த 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி காலமானார். இந்த நிலையில் இன்று அவரது நினைவு நாளில் அனுசரிக்கப்பட்டு வருகிறது என்பதும் அவரது சிலைகளுக்கு புகைப்படங்களுக்கு மாலை அணிவித்து மக்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சற்று முன்னர் பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி இனி மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது மேலும் மகாகவி நாளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி பாரதி இளம் கவிஞர் விருது வழங்கப்படும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய கடையநல்லூர் காவல்துறையினர்.!!

Image
பள்ளி  மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய கடையநல்லூர் காவல்துறையினர். * * தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS, * அவர்களின் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு காவல் துறையினர் சென்று போக்சோ சட்டம், குழந்தை திருமணம் மற்றும் கொரோனா  குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் * சார்பு ஆய்வாளர் திரு. கனகராஜ் * அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர்களின் முன்னிலையில விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 42.5 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்!!

Image
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 58 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி: இதுவரை 42.5 சதவீதம் பேர் கரோனா தடுப்பூசி போட்டுள்ளனர்!! திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 380 சிறப்பு முகாம்கள் மூலம் 58,141 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொது சுகாதார துறை சார்பில்,மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு நாள்தோறும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இம்முகாம்களில் மாவட்டம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 23 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று 380 சிறப்பு முகாம்கள் மூலம் சுமார் 58,141 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் இந்த சிறப்பு முகாமில் 12 பொறுப்பு அலுவலர்கள், 1,091 முன்கள பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி அரசு உயர்நிலைப் பள்ளியில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை பால்வளத் துறை அமைச்சர் .சா.மு.நாசர் தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் கூறும்போது, "த...