பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய கடையநல்லூர் காவல்துறையினர்.!!
பள்ளி மாணவிகளுக்கு போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய கடையநல்லூர் காவல்துறையினர்.*
*தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கிருஷ்ணராஜ் IPS,* அவர்களின் உத்தரவின் பேரில்,மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு காவல் துறையினர் சென்று போக்சோ சட்டம், குழந்தை திருமணம் மற்றும் கொரோனா குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதன் அடிப்படையில் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் *சார்பு ஆய்வாளர் திரு. கனகராஜ்* அவர்கள் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆசிரியர்களின் முன்னிலையில விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
Comments
Post a Comment