தமிழகத்தில் தியேட்டர்கள் திறப்பு ?? வெளியான முக்கிய தகவல்!!!
இதற்கிடையில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தியேட்டர்கள் மீண்டும் மூடப்பட்டது. இந்நிலையில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பாதிப்பு குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
ஆனால்தியேட்டர் திறப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய படங்களை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் கொரோனா குறைந்து வருவதன் காரணமாக தியேட்டர்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இன்று ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஆலோசனை நடத்த உள்ள நிலையில் தியேட்டர் திறப்பு பற்றி விவாதிக்கப்படும் என்றும், வருகிற 27-ஆம் தேதி முதல் தியேட்டர் திறக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Comments
Post a Comment