கோவில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உட்பட 5 பெண்கள் உயிரிழப்பு 5 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை!

கோவில் குளத்தில் மூழ்கி மூன்று சிறுமிகள் உட்பட 5 பெண்கள் உயிரிழப்பு 5 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை!

புது கும்மிடிப்பூண்டியில் உள்ள சீதம்மாள் தெருவைச் சேர்ந்த நான்கு குடும்பங்களைச் செர்ந்த 3 சிறுமிகள் உட்பட 5 பெண்கள்,அஸ்விதா, ஜீவிதா,நர்மதா,ஜோதிலட்சுமி உள்ளிட்ட 5 பேர் துணி துவைக்க சென்றுள்ளனர்.

இதில் மூன்று சிறுமிகள் கோவில் குளத்தில் இறங்கி விளையாடிக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர்.

நீரில் மூழ்கி தத்தளிக்கவே காப்பாற்ற சென்ற இரண்டு பெண்கள் உட்பட 5 நபர்கள் சம்பவ இடத்திலேயே நீரில் மூழ்கி பலியாயினர் இதை பார்த்த  அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்து சுமார் அரை மணி நேர  தேடுதலுக்கு பின் 5 பேரின் சடலங்களை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் ஒரே தெருவைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் உட்பட 5 பேர் கோவில் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

இன்று 14.10.2021 மதுரை பப்பீஸ் ஹோட்டலில் வைத்து சர்வதேச தமிழ் ப ல்கலைக் கழகம் சார்பாக சாதனையாளர்களுக்கும். சமூக சேவகர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

ஆவினில் ஆட்டுப்பால் விற்பனைக்கு வரும் - அமைச்சர் நாசர்!!

தேர்தலின் போது சொல்லியதை செய்து காட்டிய ரங்கசாமி… விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு!!